Nov 7, 2013

சொந்த குரலில் பேசமுடியாத அனுஷ்கா ..

இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்­கா­வுக்கு தான், முக்­கி­ய­மான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்­றியே அமைக்­கப்­பட்­டுஉள்­ளதால், அந்த படத்தில், ரொம்­பவே ஆர்வம் காட்­டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார், அனுஷ்கா. அதேபோல், 'சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்­கும்­போது, உங்கள் நடிப்பு யதார்த்­த­மாக இருக்கும்' என, இயக்­குனர், அனுஷ்­கா­விடம் கூறி­னாராம். அனுஷ்­காவும், முயற்சி செய்து பார்த்­துள்ளார். ஆனால், அனுஷ்­காவின் தமிழில், தெலுங்கு மற்றும் இந்தி வாடை அடித்­ததால், அவர் குரல் செட்­டா­க­வில்­லையாம். இதை­ய­டுத்து, அனுஷ்­கா­வுக்கு, சின்­ம­யியை டப்பிங் பேச வைத்­துள்­ளனர். இதனால், 'தமிழில் சொந்த குரலில் பேச முடி­யாமல் போய் விட்­ட­தே'­ என, வருத்­தத்தில் இருக்­கிறார், அனுஷ்கா. அடுத்­த­டுத்த தமிழ் படங்­களில், சொந்த குரலில் பேசியே தீரு­வது என, முடி­வெ­டுத்­துள்­ளாராம். ஆனாலும், 'இரண்டாம் உலகம்' படத்தின் தெலுங்கு பதிப்பில், அனுஷ்­காவே, சொந்த குரலில் பேசி­யுள்­ளாராம்.

No comments:

Post a Comment