Nov 20, 2013

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் சிம்பு

வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தபோது, ஆரம்பத்தில் இருந்த நெருக்கத்தை விட போகப்போக காற்று புக முடியாத அளவுக்கு அவர்களின் நெருக்கம் இறுக்கமானது. அதையடுத்து யூகங்கள் வெளியாகும் முன்பே, அவர்கள் காதலர்களாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். ஆனால், சிலகாலம் பற்றி எரிந்த அவர்களின் காதல் குறுகிய காலத்திற்குள்ளேயே முறிந்து போனது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது சொன்னார்கள்.

அதன்பிறகு பிரபுதேவாவின் காதலில் விழுந்தார் நயன்தாரா. முந்தைய காதலை விட ரொம்ப வேகமாக சென்ற இந்த இரண்டாவது காதல், கல்யாணத்தில் முடியும் நிலை உருவானது. ஆனால், யார் கண் பட்டதே இந்த முறையும் நயன்தாராவின் கழுத்தில் தாலி ஏறும் முன்பே டமார் என்று காதல் பலூன் வெடித்து சிதறியது. இதனால் இனி காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று பிரமச்சர்யத்தை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, இரண்டாவது காதல் முடிவுக்கு வந்ததையடுத்து, சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஸ்டார்ட் பண்ணி விட்டார். அவர் நடித்த ராஜாராணி, ஆரம்பம் என இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா.

அதில் ஒன்றுதான் மெரினா பாண்டிராஜ் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேடும் படலம் நடக்கிறதாம்.

ஆக, கடந்த 7 ஆண்டுகளாக விரிசல் விழுந்து கிடந்த சிம்பு-நயன்தாராவுக்கிடையிலான நட்பு பாலம் மீண்டும் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது.

ஜீன்ஸ்-2 படம் மூலம் மீண்டும் வருகிறார் பிரசாந்த்

கோலிவுட்டில், பில்லா-2, சிங்கம்-2, படங்களையடுத்து கமலின் விஸ்வரூபம்-2 மற்றும் அர்ஜூனின் ஜெய்ஹிந்த் -2 உள்பட ஏற்கனவே வெற்றி பெற்ற மேலும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது வளர்ந்து வருகின்றன. இந்தநிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். ஆனால் இந்த டைட்டிலை ஷங்கர் தரப்பில் பதிவு செய்யவில்லை. பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பதிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே பிரசாந்தை வைத்து மம்பட்டியான், பொன்னர்சங்கர் உள்பட சில படங்களை இயக்கியவர் தியாகராஜன் என்பதால், இந்த ஜீன்ஸ் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவார் என்று தெரிகிறது. இருப்பினும் அதுபற்றிய உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. மேலும், இதன் முதல் பாகத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். அதேபோல் நாசர், மனோரமா, செந்தில் என பல பிரபலங்களும் நடித்திருந்ததால், இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்துக்கு இணையான பிரபலங்களை வைத்து பிரமாண்டமாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் தியாகராஜன் .

சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரசாந்த், இந்த படத்தின் மூலம் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றும் முயற்சியாக, ஜீன்ஸ் பிரசாந்தை நினைவுபடுத்தும் வகையில் தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். இதையடுத்து அவருக்கேற்ற, புதிய ஐஸ்வர்யாராயை தேடும் படலமும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

50 நாளை கடந்தது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி நடித்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. கோகுல் டைரக்ட் செய்திருந்தார். இதில் விஜய்சேதுபதி சுமார் மூஞ்சி குமாராக நடித்திருந்தார். குமாரு இப்போது 50 வது நாளை கடந்து விட்டார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் 20 கோடி வரை வசூலித்தாக கூறுகிறார்கள். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் வரிசையில் விஜய் சேதுபதிக்கு இது நான்காவது ஹிட். சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஆல்பட், பிவிஆர் காம்ளக்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக ஒடிக் கொண்டிருக்கிறது. மாயாஜாலில் மட்டும் மூன்று காட்சிகள், மகாலட்சுமி, சீனிவாசாவில் செகண்ட் ரவுண்ட். சென்னை தவிர மற்ற ஊர்களில் செகண்ட் ரவுண்டாக போய்க்கொண்டிருக்கிறது.

மீண்டும் வருகிறது ஆனந்தம் 2

2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆனந்தம். லிங்குசாமி டைரக்ட் செய்த முதல்படம். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறந்த சகோதார்களிடையே மனைவிகளால் வரும் பிரச்னையும், செண்டிமெண்டும் தான் படம். இதில் சகோதரர்கள் நடத்தும் கடையின் பெயர் திருப்பதி பிரதர்ஸ். இதனையே லிங்குசாமி தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆக்கினார்.

இப்போது ஜெய் ஆகாஷ் என்ற நடிகர் ஆனந்தம் படத்தின் 2ம் பாகத்தை ஆனந்தம் ஆரம்பம் என்ற பெயரில் டைரக்ட் செய்து வருவதாக கூறுகிறார். இதில் நண்பர்களுக்கு திருமணம் நடக்கிறதாம். அவர்கள் மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக் கொண்டு கோவாவுக்கு சென்று விடுவார்களாம். அங்கு மூன்று அழகிகள் இவர்களை காதலிப்பார்களாம். இதை கேள்விப்பட்ட மனைவிகள் கோவாவுக்கு சென்று கணவர்களுக்கு புத்திமதி சொல்லி அழைத்து வருவார்களாம், இதுதான் படத்தோட கதையாம். இது ஆனந்தம் படத்தின் 2ம் பாகம் என்கிறார் ஜெய் ஆகாஷ். இதற்கு அவர் லிங்குசாமியிடமோ, அல்லது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடமோ அனுமதி பெற்றாரா என்று தெரியவில்லை.

ஆனந்தம் ஆரம்பம் படத்தில் ஜெய் ஆகாசுடன் ஏஞ்சல் சிங், ஜியா கான், அலக்கியா, மான்சி, ரம்யா என 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சுமன் மியூசிக், தேவராஜ் கேமராமேன்.
5 ஹீரோயின்கள், கோவாவில் நடக்கும் கதை ஏதோ பிளான் பண்ணித்தான் படத்தை டைரக்ட் செய்கிறார் ஜெய் ஆகாஷ்.

Nov 12, 2013

தியேட்டர்களுக்கு உலா செல்லும் விஷால்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றியை ருசித்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். பாண்டியநாட்டுக்கு கிடைத்திருக்கும் பரவலான வரவேற்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார். இதனால் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு டைரக்டர் சுசீந்திரனை அழைத்துக் கொண்டு தியேட்டர் உலா சென்று கொண்டிருக்கிறார். சென்னை தவிர்த்து பாண்டிய நாடு திரையிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

வேலூர் சென்ற விஷால் அங்கு தியேட்டரில் ரசிகர்களை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் பாண்டியநாடு பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதலில் 350 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது கூடுதலாக 75 தியேட்டர்களில் திரையிட்டுள்ளோம். எனது வாழ்க்கையில் பாண்டியநாடு முக்கியமான படமாக இருக்கும். இந்த வெற்றியை தந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை கடலூர், சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளுக்கு சென்ற வந்திருக்கிறேன். அடுத்து திருச்சி, கோவை, மதுரை, நெல்லைக்குச் செல்ல இருக்கிறேன். அடுத்து நான் சிவப்பு மனிதன் படத்தில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும். மதகஜராஜா எப்போது ரிலீசானலும் ஹிட்டாகும்.
இவ்வாறு விஷால் கூறினார்.

நிச்சயம் காதல் கல்யாணம் தான் செய்வேன் - அனுஷ்கா

எனது கல்யாணம் கண்டிப்பாக காதல் கல்யாணமாகத் தான் இருக்கும் என் 'இரண்டாம் உலகம்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் வருகிற நவ., 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா, இரண்டாம் உலகம் படம் முற்றிலும் வித்தியாசமான படம். இப்படத்தில் லவ், எமோஷன் என எல்லாமே இருக்கு. குறிப்பாக இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன். ஜார்ஜியா காட்டிற்குள், தனியாக சண்டை பயிற்சியாளர் வைத்து எனக்கு சண்டையெல்லாம் கற்றுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

பொதுவாக ஆர்யா கூட நடிக்க எல்லா நடிகைகளும் விரும்புவாங்க, நானும் அப்படித்தான். ஆர்யாவிட்டு பிரியாணியை ரொம்பவே நான் மிஸ் பண்றேன். இருந்தாலும் அடுத்தமுறை கண்டிப்பாக பிரியாணியை ருசித்து விடுவேன். தெலுங்கில் அருந்ததீ, ருத்ரமாதேவி போன்ற வரலாற்று படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் அதுபோன்று வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கு என் கல்யாணத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. என் கல்யாணத்திற்கான நேரம் வரும்போது அதை நானே அறிவிப்பேன். நிச்சயமாக எனது கல்யாணம் காதல் கல்யாணமாகத்தான் இருக்கும். இரண்டாம் உலகம் படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என்றார்.

ஹிருத்திக் ரோஷனுக்கு விஜய் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்து உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் கிரிஷ்-3. இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோதிலும், படம் திரையிடப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கு சென்று ரசிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார் ஹிருத்திக்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் அப்படம் திரையிடப்பட்டிருக்கும் சத்யம் திரையரங்கிற்கு வந்திருந்த ஹிருத்திக், படத்தை வெற்றி பெறுவற்கு உறுதுணையாக இருந்ததற்காக மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ஷாரூக்கானைப்போன்று தமிழ்ப் படங்களில் தமிழ் பேசி நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், வாய்ப்பு கிடைத்தால் அடுத்து தமிழில் கால்சீட் கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும், ஹிருத்திக் ரோஷன் மீடியாக்களை சந்திக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அவரை சந்திக்க நினைத்திருந்தாராம் நடிகர் விஜய். ஆனால், நேற்றைய தினம் படப்பிடிப்பு செங்கல்பட்டில் நடைபெற்றதால் அவரால் வர இயலவில்லையாம் அதனால், தனது பிஆர்ஓ மூலமாக ஹிருத்திக்கிற்கு பொக்கை அனுப்பி வாழ்த்தி தெரிவித்திருந்த விஜய், தான் குடும்பத்தாருடன் கிரிஷ்-3 படத்தை பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணியதாகவும் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Nov 9, 2013

கதை இல்லாமல் படம் எடுக்கும் பார்த்திபன்

வித்தகன் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பங்ஷன், ஜங்ஷன் என்று பிசியாக இருந்தார் பார்த்திபன். இப்போது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பார்த்திபன் நடிக்கவில்லை  சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்தினார்.

அப்போது அவர் படத்தை பற்றி கூறும்போது " கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம், இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேட்பாங்க. அப்படி கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்.

நல்லா யோசிச்சுப்பார்த்தா நாம ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரு எழுதின திரைக்கதையிலதான் நடிச்சிக்கிட்டிருக்கோம். இன்னொருத்தர் எழுதின வசனத்தைதான் பேசிக்கிட்டிருக்கோம். வாழ்க்கையில் அடுத்த நொடி, அடுத்த நிமிடம் நடக்குற விஷயங்கள்தான் கதையை உண்டாக்குது. இன்னும் சொல்லப்போனா வாழ்க்கையில கதைன்னு ஒண்ணு கிடையாது. எல்லாமே சம்பவங்கள்தான். சினிமாலதான் கதை இருக்கும். மதன் கார்க்கி எழுதின "காற்றில் கதை இருக்கு..." என்ற பாட்டுதான் படத்தோட புரமோஷன் பாட்டு. அதை கேட்டீங்கன்னா படம் என்னென்னு தெரிஞ்சுடும். இது சவாலான முயற்சிதான்" என்றார்.

ஆடம்பர ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்..!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.

சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.

 

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல்

தீபாவளி படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இப்போதும் ஹவுஸ்புல்லாக
ஓடிக் கொண்டிருக்கிறது ஆரம்பம். படம் வெளியான ஒரு வாரத்தில் 50 கோடியை
வசூல் செய்துள்ளது ஆரம்பம். சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 7 கோடியே 20
லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 கோடி வசூலித்தது.
வெளிநாடுகளில் 20 கோடி கோடியென மொத்தம் 50 கோடியை தாண்டிவிட்டது.இரண்டாவது வார இறுதியில் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50வது நாளுக்குள் 150 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள்.

Nov 8, 2013

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்

பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.
இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை. சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி நடிகர் சிட்டி பாபு திடீர் என்று மயங்கி விழுந்தார்.
கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சுய நினைவை இழந்து, கோமாவில் சிட்டிபாபு இருப்பதாகவும், அவரது மூளையில் கட்டி இருப்பதாக இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (8ஆம் தேதி) மாலை நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்.

முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன்

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டு. பணமும் அவர் காட்டில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதனால் அவர் முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு இருந்தது. அதனை மறுத்திருக்கிறார் லட்சுமி மேனன்.

"நான் அழகான பொண்ணு கிடையாது. பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன். அழகானவள்ங்கற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. என் தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன். அதில் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். அதுதான் வெற்றிகளுக்கு காரணம். சிலபேர் நான் வெயிட் போட்டுவிட்டதா சொல்றாங்க. அப்படியேதான் இருக்கேன். சேலை கட்டினா வெயிட் போட்ட மாதிரி தெரியும். மற்ற டிரஸ் போட்டால் வெயிட் குறைஞ்ச மாதிரி தெரியும்.

முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம். அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு. இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன். அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க.

ஆந்திராவை விட்டு வரமாட்டேன் - ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.
அப்படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காக இடம்பிடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பென்சில், வீர தீர சூரன் என அவருக்கு அடுத்தடுத்த  படங்கள் புக் ஆகி வருகின்றன.
இதனால் ஆந்திராவில்  இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு  வருமாறு சிலர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போதைக்கு ஐதராபாத்தை விட்டு வரமாட்டேன், வந்தால் என் படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளாராம்.

இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை - சந்தானம்

மார்க்கெட்டை உயர்த்துவதற்காக இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் சந்தானம்.
தற்போதைய நம்பர் ஒன் கொமடியனாக சந்தானம் பல படங்களில், ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போலவே நடித்து வருகிறார்.
இது தவிர இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் என்றென்றும் புன்னகை படத்தின் டிரெய்லரில் அவர் பேசும் வசனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த காட்சியைப் பார்த்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவரும் மறுபிரவேசம் செய்திருக்கும் இந்த நேரத்தில் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பால் தனது மார்க்கெட் போய்விடக்கூடாது என்று கருதிய சந்தானம் இனி ஆபாசமாக, வசனம் பேசப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

Nov 7, 2013

சொந்த குரலில் பேசமுடியாத அனுஷ்கா ..

இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்­கா­வுக்கு தான், முக்­கி­ய­மான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்­றியே அமைக்­கப்­பட்­டுஉள்­ளதால், அந்த படத்தில், ரொம்­பவே ஆர்வம் காட்­டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார், அனுஷ்கா. அதேபோல், 'சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்­கும்­போது, உங்கள் நடிப்பு யதார்த்­த­மாக இருக்கும்' என, இயக்­குனர், அனுஷ்­கா­விடம் கூறி­னாராம். அனுஷ்­காவும், முயற்சி செய்து பார்த்­துள்ளார். ஆனால், அனுஷ்­காவின் தமிழில், தெலுங்கு மற்றும் இந்தி வாடை அடித்­ததால், அவர் குரல் செட்­டா­க­வில்­லையாம். இதை­ய­டுத்து, அனுஷ்­கா­வுக்கு, சின்­ம­யியை டப்பிங் பேச வைத்­துள்­ளனர். இதனால், 'தமிழில் சொந்த குரலில் பேச முடி­யாமல் போய் விட்­ட­தே'­ என, வருத்­தத்தில் இருக்­கிறார், அனுஷ்கா. அடுத்­த­டுத்த தமிழ் படங்­களில், சொந்த குரலில் பேசியே தீரு­வது என, முடி­வெ­டுத்­துள்­ளாராம். ஆனாலும், 'இரண்டாம் உலகம்' படத்தின் தெலுங்கு பதிப்பில், அனுஷ்­காவே, சொந்த குரலில் பேசி­யுள்­ளாராம்.

Nov 6, 2013

நய்யாண்டி படத்திற்கு எதிராக வழக்கு!!



Tamil Cinema நய்யாண்டி
தொப்புள் பிரச்னை தீர்ந்து 'நய்யாண்டி' படம் ரிலீஸாகியுள்ள நிலையில், 'நய்யாண்டி' படத்தின் கதை என்னுடையது என மலையாள தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'நய்யாண்டி' படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். சற்குணம் இயக்கத்தில், தனுஷ்-நஸ்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் 'நய்யாண்டி'. இப்படம் வெளிவர சில நாட்கள் இருந்த நிலையில், படத்தில் நான் நடிக்காத தொப்புள் காட்சியை மார்பிங் செய்து படத்தில் வெளியிட்டுவிட்டனர் என பிரச்னை செய்தார் இப்படத்தின் நாயகி நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அந்தக்காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்தனர். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் மணி.சி.கப்பன் என்பவர் நய்யாண்டி படத்தின் கதை என்னுடையது என்று புது பிரச்னையை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். தமது மனுவில் மணி.சி.கப்பன் கூறியிருப்பதாவது, மலையாளத்தில் 1993ம் ஆண்டு, ஜெயராம்-ஷோபனா நடிப்பில் நான் தயாரித்த படம் 'மெலி பரம்பில் ஆண் வீடு'. இப்படத்தின் கதையை இப்போது நய்யாண்டி என்ற பெயரில் தமிழில் எடுத்துள்ளனர். இதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. படத்தை பார்த்த பலரும் இது என்னுடைய படம் போன்று இருப்பதாக கூறினர். மேலும் படத்தில் 12க்கும் மேற்பட்ட காட்சிகள் எனது படத்தில் இருப்பது போன்றும், அதில் வரும் வசனங்கள் கூட என் படத்தில் இடம்பெற்ற வசனம் போன்றே படமாக்கப்பட்டு இருப்பதாகவும், இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய நான் முயற்சி எடுத்து வந்த வேளையில், என்னிடம் அனுமதி பெறாமல் நய்யாண்டி படத்தை எடுத்துள்ளனர். ஆகவே இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி நய்யாண்டி படத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.
                                                                        - நன்றி தினமலர்

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைபடத்திலிருந்து 25 நிமிட காட்சிகள் நீக்கம் ..


தீபாவளியையொட்டி வெளியான ஆல்இன்ஆல் அழகுராஜாவில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர். ராஜேஷ் எம். இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்தது. இதை குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று தியேட்டர்காரர்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். வெளியூர்களில் தியேட்டர்காரர்களே சில காட்சிகளை எடிட் செய்து திரையிட்டு வந்தார்கள். இதனை கேள்விப்பட்ட இயக்குனர் தானாகவே முன்வந்து 20 நிமிட காட்சிகளை வெட்டி படத்தின் நீளத்தை குறைத்துள்ளார். எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று உதவியாளர்களுக்கு சொல்லி அவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு அனுப்பி 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. தற்போது படம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுகிறது. இப்போது படம் விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

                                                                                      - நன்றி தினமலர்
கார்த்தி நடித்த
கார்த்தி நடித்த
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf

Nov 5, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - விமர்சனம்



முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

                                                                                      -நன்றி தினமலர்

கனடாவில் உள்ள தெருவுக்கு ரஹ்மான் பெயர்!


கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமா கடந்து, இந்திய சினிமா கடந்து ஹாலிவுட் சினிமா வரை பேசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரேநேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அவருக்கு பல்வேறு கவுரவம் கிடத்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்ந்துள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் டொரண்டாவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சாதனைகளை போற்றி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் மர்கம் பகுதில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்(அல்லாஹ் ரகஹா ரஹ்மான்) சூட்டப்பட்டது.

கமல் கைவிட்ட சண்டியரை பிடித்தது வேந்தர்

2004ம் ஆண்டு கமல் நடித்து இயக்கிய படம் விருமாண்டி. மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப் படம் ஒரு சம்பவத்தை இரண்டு பார்வையால் பார்க்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை கொண்டது. இந்தப் படத்துக்கு கமல் முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைத்திருந்தார். தென்தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட் ஜாதியின் முரட்டுத்தனமான இளைஞர்களை சண்டியர் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. அதனால் அந்த பெயரை வைக்ககூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிட்ட சில மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே கமல் சண்டியர் தலைப்பை கைவிட்டு படத்தில் அவர் கேரக்டர் பெயரான விருமாண்டியை வைத்து விட்டார்.

இப்போது அதே சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சோழ தேவன் என்பவர் டைரக்ட் செய்கிறார். நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். யதீஷ் மகாதேவ் மியூசிக், ரித்தீஸ் கண்ணா கேமரா மேன். உயிர்மெய் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. சங்கர், பிரசாத், செந்தில்குமார் என மூன்று தயாரிப்பாளர்கள். படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் வாங்கி வெளியிடுகிறார். அன்று படத்தின் தலைப்பை எதிர்த்தவர்கள் இப்போது அனுமதிப்பார்களா? மீண்டும் பொங்கி எழுவார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

சுட்டகதை - விமர்சனம்



தாறுமாறான ஓட்டைகளுடன்... சுட்ட கதை.

கோரமலை பழங்குடி மக்கள் தலைவனான ஒட்டகம் (எம்.எஸ்.பாஸ்க்ர), தன் நெற்றியில் ‘தோட்டா’ தாங்கியபடி, சிரித்த முகத்துடன் சரியும் அந்த ‘திகில்’(?!) காட்சியில் தொடங்குகிறது... சுட்ட கதை. ராம்கியும் (பாலாஜி), சங்கிலியும் (வெங்கி) கோரமலை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்கிறார்கள். ஒட்டகத்தை கொன்றது யார்? என கண்டுபிடிக்க அல்ல! எந்நேரமும் சமோசாவும், தூக்கமுமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் திருமேனியின் (நாசர்) வீட்டு வேலைகளைச் செய்ய! சுட்டகதை ‘நகைச்சுவை படம்’ என்பதால், இந்த இடத்தில் நாசர் சிரிக்கிறார். பாவம்... அவர் மட்டுமே சிரிக்கிறார்! இப்படி, நகைச்சுவை ததும்ப(!) தொடங்கும் கதையில், இடைவேளையின்போது ஒரு ‘ட்விஸ்ட்’. கான்ஸ்டபிள் ராம்கியும், ஜீப் ஓட்டுனரான சங்கிலியும், ‘கெட்ட’ போதையில், திருமேனியின் துப்பாக்கியை எடுத்து விளையாட... டுமீட்! சுட்டது ராம்கி. சத்தமில்லாமல் சுருண்டது... ட்விஸ்ட் (ஜெயப்பிரகாஷ்). (செம ‘ட்விஸ்ட்’டுப்பா!). ஆனா, செத்தது ஆலிவர் ட்‌விஸ்ட் இல்ல! பின்னே! வீரகேசரி (ஆர்.எஸ்.சிவாஜி). அடடே... இது யாரு? அது... அது... அதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும், ‘பென்சில்’ மீசை வைத்திருக்கிறார்கள் என்பது படத்தின் சிறப்பம்சம்! மற்றபடி... ‘எப்படி நடிச்ச ஆளுப்பா! இவரு போய்...’ என, ரசிகனை வருத்தப்பட வைக்கிறார் நாசர். படத்தின் நாயகர்கள் என சொல்லப்படும் இருவரும், ஏதேதோ செய்தும், பேசியும் வித்தை காட்டுகிறார்கள். ஆனால்... அத்தனையும் வீண்! படத்தில் ஒரு நாயகியும் உண்டு. அடிக்கடி பிணம் சுமக்கும் அந்த பாவையின்பெயர் சிலந்தி(லஷ்மிபிரியா)!

‘கதை வேண்டாம்! வித்தியாசமான விளம்பரங்கள் போதும். ரசிகன் நிச்சயம் திரை அரங்கிற்கு வருவான்!’ என்ற நம்பிக்கையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சுபு. அவருக்கு வெற்றி! ரசிகனுக்கு.... மரண அடி!

மொத்தத்தில் ‘சுட்ட கதை’ - ‘அது வருது ஓடிருங்க’.

ராஜா ராணி - விமர்சனம்


மெளன ராகம்’ படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம்! மணிரத்னம், ‘ராஜா ராணி’ படத்தை பார்க்காமல் இருப்பது இப்படத்தின் இயக்குநர் அட்லீக்கும், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் நன்மை பயக்கும்.

காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

                                                             -நன்றி தினமலர்

பாண்டிய நாடு - விமர்சனம்


மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.

அமைச்சர் (மத்திய அமைச்சரா...? மாநில அமைச்சரா...?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.

இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!

டீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!

பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்!

ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன!
                                                                              -நன்றி தினமலர்

ஆல் இன் ஆல் அழகு ராஜா - விமர்சனம்


சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் ராஜேஷ்.எம்.-ன் மீது அதீத நம்பிக்கை வைத்து கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ் மீதான கார்த்தியின் நம்பிக்கையை இயக்குநர் ராஜேஷ் எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்தாரா? ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலினுக்கெல்லாம் வெற்றியை தேடித்தந்த ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தியும் வெற்றி வாகை சூடுவாரா? இல்லையா? என்பதை இனி பார்ப்போம்...

பிரபு-சரண்யா தம்பதியின் ஒற்றை ஆண் வாரிசு அழகுராஜா கார்த்தி. தான் நடத்தும் லோகல் கேபிள் சேனலை நம்பர் ஒன் சேனல் ஆக்கிய பின்புதான் கல்யாணம் என கண்ட கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தன் சேனலில் ஒலி, ஒளிபரப்பி வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருபவர் கார்த்தி. அவர் தன் நண்பர் கல்யாணம் என்னும் சந்தானத்தின் காதர்பாய் பிரியாணி ஆசைக்காக, ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறார். போன இடத்தில் அந்த மண்டபத்தில் நடக்கும் லைட் மியூசிக்கில் தப்பும் தவறுமாக பாடும் கொப்பும் குலையுமான சித்ராதேவிபிரியா என்னும் காஜல் அகர்வால் மீது காதல் வயப்படுகிறார். தனக்கு பாட்டு சரவரவில்லை என்றால் பரதம் என்று கலைத்துறையில் ஏதாவது சாதித்த பின்புதான் திருமணம் என கார்த்தி மாதிரியே விரதமிருக்கும் காஜல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப பாட்டும் வராமல் ஆட்டமும் சரிவராமல் கார்த்தியின் காதலுக்கு இல்லை இல்லை.. கடலைக்கு சற்றே மனம் இறங்குகிறார், இளகுகிறார். ஆனால், இந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா பிரபு இவர்களது காதலுக்கு தடை போடுகிறார். காரணம் பிரபுவின் பிளாஷ்பேக் காதல்! காஜலின் தாத்தா ராமசாமி என்னும் நாசரிடம் டிரைவராக வேலைபார்க்கும் பிரபுவுக்கு நாசரின் மகள் மீனாட்சி என்னும் ராதிகா ஆப்தே மீது காதல்! அந்த காதல் நாசருக்கு தெரிய வருவதற்கு முன்பே நாசரிடம் பிரபுவை (பிரபுவின் இளவயதிலும் கார்த்தியே நடித்திருப்பது மட்டுமே இம்மாம்பெரிய படத்தில் புதுமை, பொருத்தம்!) வேலைக்கு சேர்த்துவிட்ட கல்யாணம் சந்தானத்தின் அப்பா காளி சந்தானம் பிரபுவை (அதாங்க கார்த்தியை) வேறு ஒரு மேட்டரில் சிக்கவைத்து வேலையை விட்டு தூக்குகிறார். அதனால் பிரபு-ராதிகா ஆப்தேவின் காதல் பணால் ஆகிறது. அந்த கடுப்பில் கார்த்தியின் காஜல் மீதான காதலுக்கு நோ சொல்கிறார் பிரபு. அப்பா சந்தானம் செய்த தப்புக்கு பிள்ளை சந்தானம் பிராயச்சித்தம் தேடி பிரபுவின் சம்மதத்துடன் கார்த்தி-காஜலின் காதலை சேர்த்து வைக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா இனிதே முடிகிறது! இனிதேவா.?!

ஏதோ டாப்-10, படவரிசை பத்து, நகைச்சுவை கலாட்டா உள்ளிட்ட சின்னத்திரை டிராமா மாதிரியான கதையை துணிச்சலாக படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-ஐ பாராட்டியே ஆகவேண்டும்! அதில் துணிச்சலாக நடிக்கவந்த கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, நாசர், சரண்யா, வி.எஸ்.ராகவன், ராதிகா ஆப்தே, கோட்டா சீனிவாசராவ், ஆடுகளம் நரேன், ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு அபார துணிச்சல்தான்.

இந்த காமெடி டிராமாவுக்கும் பேமிலி டிராமாவுக்கும் இசையமைத்திருக்கும் எஸ்.தமன், ஒளிப்பதிவு செய்திருக்கும் சக்திசரவணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் ராஜேஷ்.எம் மாதிரியே ரொம்பவே துணிச்சல்! இதை படமாக தயாரித்திருக்கும் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு துணிச்சலோ துணிச்சல்! ஆனால் அந்த துணிச்சல், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருக்காது என்பதுதான் படக்குழுவினருக்கு எரிச்சல்! ஆக மொத்தத்தில் ப்ளாஷ்பேக்கில் பிரபுவாக நடிக்கும் கார்த்தி போர்ஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆல் இன் ஆல் அழகுராஜா - அல்வாராஜா! ராஜேஷ்.எம்-க்கு சரக்கு தீர்ந்துபோச்சா...?

                                                                          - நன்றி தினமலர்

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

ஆரம்பம் - சினிமா விமர்சனம்


அஜித் ஒரு போலீஸ்  ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும் . அவரும்  தீவிரவாதிகளைத்தாக்கும்  ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடறாரு . புல்லட் ப்ரூஃப்  ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு .
  .அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க . புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு . அதில் கமிஷனர் , மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு . 
தன் நண்பனின் சாவுக்குக்காரணமானவங்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த  ஊழல் பணத்தை எல்லாம்  எப்படி ரிட்டர்ன் எடுக்கறார் என்பதே திரைக்கதை . 
ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே  தெரியுது . அது சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை சொல்லி இருக்காங்க .
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல் . அவர் படத்தில் பேசும் காட்சிகள் குறைவு , ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் . மேக் இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம் . கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார் . ஃபைட்  சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப் , காரில் தொங்கி சண்டை இடும் காட்சி என 2 இடங்களில்  ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.
                                                                            -நன்றி www.adrasaka.com