Dec 17, 2013

என் மனைவி என்னைவிட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் அவருக்கு உண்டு - ஹிருத்திக் ரோஷன்

என் மனைவி, என்னைவிட்டு பிரிந்து வாழ முடிவு செய்தாலும், அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, ஒருபோதும் மாறாது, என, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், உருக்கமாக கூறியுள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும், சுசானே என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, ஹிருத்திக்கை பிரிந்து வாழ, சுசானே முடிவு செய்துள்ளார். இதற்கு, ஹிருத்திக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிருத்திக் கூறியதாவது, சுசானே, என்னைவிட்டு பிரிந்து வாழ்ந்தாலும், எப்போதுமே, என் இதயத்தில் அவருக்கு இடம் உண்டு. அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, எப்போதும் மாறாது.சுசானே மீது, நான் வைத்திருக்கும் காதலுக்காக, என் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இல்லாத வாழ்க்கை தான், அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், எந்தவிதமான தியாகத்துக்கும், நான் தயார்.

No comments:

Post a Comment