Dec 17, 2013

எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது - அமலா பால்

தலைவா'வுக்கு பின், அமலா பால் நடித்துள்ள படம், 'நிமிர்ந்து நில்' இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா பால், இதன் தெலுங்கு ரீ-மேக்கில், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படத்தில் நடித்த அனுபவம் பற்றி அமலா பால் கூறுகையில், 'நான் நடித்ததில், இது ரொம்ப முக்கியமான படம். டைரக்டர் சமுத்திரகனியைப் பார்த்தாலே, எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். காரணம், அவரிடம் சமூக சிந்தனை அதிகம். அவர் அருகில் அமர்ந்தாலே, சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இதன் காரணமாகவே, இந்த படத்தில் நடித்த பின், எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது' என்கிறார். 'சமுத்திரகனிக்கு இப்படி ஐஸ் வைத்துஉள்ளதன் மூலம், அவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு, இப்போதே அச்சாரம் போட்டு விட்டார், அமலா பால். தெலுங்கு மற்றும் தமிழில், அமலா நடித்துள்ள படங்கள், தொடர்ந்து பிளாப் ஆவதால், அவருக்கு, அதிகமாக படங்கள் புக் ஆவது இல்லை. இதனால் தான், இப்படி ஐஸ் வைக்கிறார்' என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

No comments:

Post a Comment