Nov 8, 2013

இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை - சந்தானம்

மார்க்கெட்டை உயர்த்துவதற்காக இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் சந்தானம்.
தற்போதைய நம்பர் ஒன் கொமடியனாக சந்தானம் பல படங்களில், ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போலவே நடித்து வருகிறார்.
இது தவிர இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் என்றென்றும் புன்னகை படத்தின் டிரெய்லரில் அவர் பேசும் வசனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த காட்சியைப் பார்த்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவரும் மறுபிரவேசம் செய்திருக்கும் இந்த நேரத்தில் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பால் தனது மார்க்கெட் போய்விடக்கூடாது என்று கருதிய சந்தானம் இனி ஆபாசமாக, வசனம் பேசப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

No comments:

Post a Comment