Jan 9, 2014

ரொமான்ஸ் காட்சிக்கு யாரும் டூப் போடுவதில்லையே? சண்டை காட்சிக்கு மட்டும் ஏன் - அஜீத்


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் நாளை திரைக்கு வருகிறது. அதனால் அரக்க பரக்க ரிலீஸ் வேலைகளில் தீவிரமடைந்துள்ளது வீரம் டீம். இந்த நிலையிலும் அப்படம் பற்றிய கடைசி பேட்டியாக சிலர் டைரக்டர் சிவாவை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

அப்போது சிலர், ரயில் சண்டை காட்சியில் அஜீத் எடுத்த ரிஸ்க் பற்றி அவரிடத்தில் கேட்டதற்கு, அதுதான் படத்தின் ஹைலைட்டே. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல வேண்டும். இதில் நடிப்பதில் ரிஸ்க் என்பதால், டூப் நடிகரை வைத்து எடுத்து விட நினைத்தேன். ஆனால் அஜீத் குறுக்கிட்டு, அதுல என்னதான் ரிஸ்க் இருக்குன்னு பாத்திடுவோமே என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினார். இதனால் அந்த காட்சியை படமாக்கி முடிக்கிற வரைக்கும் ஒரே பயம். ஆனால், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் சண்டை போட்டபடி ஒவ்வொரு கம்பியாக லாவகமாக பிடித்தபடி நடித்தார் அஜீத்.

அந்த காட்சியை முடித்து விட்டு வந்தபோது, ஏன் சார் இப்படியெல்லாம் தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறீங்க? என்று கேட்டபோது, நான்தானே ஹீரோ. அப்ப நான்தானே வில்லன்களை அடிக்கனும். அதை விட்டுட்டு டூப் நடிகரை வச்சு அந்த காட்சியை படமாக்கினால் எப்படி என் ஹீரோயிஸம் முழுமை பெறும் என்றாராம் அஜீத். அதோடு, கதாநாயகியை கட்டிப்பிடிச்சு நடிக்கிற ரொமான்ஸ் காட்சியிளெல்லாம் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளை டூப் நடிகருங்ககிட்டு விடுறது எந்த விதத்திலும் நியாயமே இல்லை. அதனால்தான், லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் நானே பார்த்திடுறதுங்கிற முடிவுக்கு இறங்கிட்டேன் என்றாராம்.

No comments:

Post a Comment